தமிழ் செம்மொழி என்று யாரும் சொல்லத்தேவையில்லையென்றாலும் இன்றைய விளம்பரச் சூழலில் அது தேவையாயிருக்கிறது. இன்று தமிழ் செம்மொழியாகிவிட மற்ற மொழிகளும் அந்த வரிசையில் சேரத் துடிக்கின்றன.
இலக்கியம் ஒரு மொழியின் செம்மைக்கு எடுத்துக்காட்டு. காலங்கள் மாறியும் இலக்கியம் இயம்பும் கருத்தும் செறிவும் மாறாமல் இருப்பதே அவ்விலக்கியங்களின் சிறப்புக்குச் சான்று.
தமிழிலக்கியங்கள் காலங்களோடு கண்டறியப்படுபவை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பரிணாமத்தில் இலக்கியம் வந்துள்ளது.
சங்க காலத்தில் உள்ள அகத்திணை புறத்திணைகளும், அதன் பின்னர் எழுந்த பக்தி இலக்கியங்களும் குறிப்பிடத்தக்கவை.
தமிழிலக்கியம் இவ்வுலகைச் சூழ்ந்துள்ள பெரும் கடற்பரப்பிற்கொப்பானது. நானோ அலகில்லா அதன் பெரும்பரப்பின் கரையில் நிற்கும் சிறுவனைப் போன்றவன்.
என் சிற்றறிவிற்கெட்டிய வரையில் நான் ரசித்து மகிழ்ந்த இலக்கியங்களைப் பதிந்து கொள்ளுவதற்காகவும் பகிர்ந்து கொள்வதற்காகவுமானது இம்முயற்சி.
இதில் சிறிதளவேனும் வெற்றி பெற சீரளமைத் திறம்படைத்த தமிழ்த்தாயை வாழ்த்தி வணங்கித் துவங்குகிறேன்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ். வெல்க தமிழ்.
செவ்வாய், 14 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக