நான் சற்றொப்ப 24 மாத காலமாய் தமிழ்மணத்தின் வாசகனாக இருந்து வந்திருக்கிறேன். தற்போதுதான் பதிவெழுத வந்துள்ளேன். தமிழ்மணம் குறித்தான எனது ஒரு துரித மீள்பார்வையை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்மணத்தில் இத்தனை கும்மிகள் இல்லை. பின்னூட்ட கயமைத்தனம் என்பது கன்டறியப்படாத காலம். சாதாரண நக்கல்களும் கேலி கிண்டல்களும் நிறைந்த பதிவுகள் வலம் வந்து கொண்டிருந்ததன.
பிறகு, குழலி, கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ், விடாது கருப்பு போன்றோர் சமூக சிந்தனைகளின் தாக்கத்தோடு பதிவெழுதினர். அக்கால கட்டத்தில் தமிழ்மணத்தில் சூடு பறந்தது. இப்பொழுது இவர்களின் பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லையா எனத் தெரியவில்லை.
இடையில் பல்வேறு போலிகள் தோன்றினார்கள். போலி டோண்டு, போலி விடாது கருப்பு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விட்டது சிகப்பு என்று ஒரு பதிவர் இருந்தார்.
மாயவரத்தான், முகமூடி ஆகியோர் . அவர்களையும் காணவில்லை.
டுபுக்கு, நகைச்சுவை பதிவர்களின் பிதாமகர் என்பது எனது தாழ்மையான கருத்து. இப்போது இவர் பதிவும் தமிழ் மணத்தில் காணப்படுவதில்லை.
இவர்கள் அனைவரும் பதிவெழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
ஸ்டிராங்காக அடித்து ஆடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அடுத்து வரும் பதிவுகளில். அனைத்து நிகழ்ச்சிகளையும் கூட்டி கழித்து பார்க்கும் போது ஒரு தத்துவப் பாடல் தான் நினைவிற்கு வருகிறது.
யாரோ வருவார் யாரோ போவார். வருவதும் போவதும் தெரியாது. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த தமிழ் மணத்தில் நமக்கே இடமேது?.
இந்த தத்துவப்பாடல் சரியா. நான் புதிய பதிவனாக இருப்பதால் எனக்கு இது நினைவுக்கு வருகிறதா. பழைய பதிவருக்கு என்ன பாடல் நினைவுக்கு வரும்?.
டிஸ்கி : அடுத்த பதிவு - புதிய பதிவர்கள் படிக்க வேண்டிய பழைய பதிவர்கள்